மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திணை உணவகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 17, 2023

மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திணை உணவகங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை, ஆக. 17- மாவட்ட அள விலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திசா) 3ஆ-வது மாநில கூட்டம், சென்னை தலை மைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:- 

இந்த ஆண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடிப் படை பயிற்சி வழங்கவும், ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகளுக்கும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு களின் அலுவலக நிர்வாகிகளுக்கும், ஆளுமை மற்றும் நிதிமேலாண்மை குறித்த புத்தாக்க பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கடந்த ஆண்டில் நடைபெற்ற கண்காட்சிகளில் 3,528 சுயஉதவி குழுக்கள் ரூ.3.75 கோடி அளவில் விற்பனை செய்துள்ளனர்.

வணிக முத்திரை

மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் 137 விற்பனை அங்காடி அமைக்கப்பட்டு சுயஉதவி குழு தயாரிப் புகளை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்படுவதுடன், முறையான பேக் கிங் மற்றும் தயாரிப்புகளை தரப்படுத்து வதற்கான முன்முயற்சிகள் எடுக்கப் பட்டு மதி வணிக முத்திரை வழங்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுயஉதவி குழுக்க ளுக்கு வங்கிக்கடன் வழங்க ரூ.25 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டு, அதையும் தாண்டி 25 ஆயிரத்து 642 கோடி ரூபாய், 4 லட்சத்து 49 ஆயிரத்து 209 சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கி அரசு சாதனை புரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.45 ஆயிரம் கோடியையும் தாண்டி, 47 ஆயிரத்து 34 கோடி ரூபாய் வழங்கி சாதனை புரிந்துள்ளோம்.

வங்கிக் கடன் இணைப்பு

இந்த ஆண்டு வங்கிக்கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.30 ஆயிரம் கோடியில் கடந்த ஜூன் வரை, சுயஉதவி குழுக்க ளுக்கு ரூ.5,644 கோடி வங்கிக்கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதை மேலும் வளர்த்தெடுக்க வேண் டும். மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல் வேறு புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி சந்தை என்ற இணையவழி விற்பனை தளத்தை உருவாக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருட் களை அவர்களுக்கு உள்ளாகவும், பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமா கவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடத்தப்படும்.

மதி அங்காடிகள்

மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப் படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் மதி அங்காடிகள் நிறுவப்படுவதுடன், சிறப்பு சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி விரைவு வாகனங்கள் வழங்கப்பட வுள்ளன. 

மேலும் சுயஉதவி குழுக்களால் இயக்கப்படும் மதி திணை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட வுள்ளன.

காலை உணவுத் திட்டம்

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவன சுயஉதவி குழு உறுப் பினர்களை பயிற்றுவித்து, அவர் களின் பங்கேற்பின் மூலம், தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மன் - சத்துணவு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில், 46 லட்சத்து 70 ஆயிரத்து 458 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.

மின்னணு வேளாண் சந்தை

வேளாண்மை, உழவர் நலத் துறை யின் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஒழுங்குமுறை விற்பனை கூடங் களின் எண்ணிக்கை 284. இதில் 2021ஆம் ஆண்டுவரை முதல் கட்ட மாக, 63 ஒழுங்குமுறை விற்பனை கூடங் கள் இணைக்கப்பட்டன.

2021_20-22ஆ-ம் ஆண்டில் 2-ஆம் கட்டமாக 64 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், 2023ஆ-ம் ஆண்டில் 3ஆ-ம் கட்டமாக 30 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்கப்பட் டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, அய்.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், உதய நிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக் கம், ஆ.ராசா, திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன், நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எழிலன், அசன் மவுலானா, செங்கோட் டையன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செய லாளர் செந்தில்குமார் மற்றும் உயர் அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment