முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

உரத்தநாடு, ஆக.18 உரத்தநாடு ஒன்றிய நகர கழகத்தின் சார்பில், உரத்தநாடு காளியம்மன் கோவில் தெருவில் 14.08.2023 அன்று மாலை 6 மணியளவில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் உரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, நகர துணை செயலாளர் இரா.இராவ ணன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.பி.சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஒன்றிய செயலாளர் மாநல்.பரம சிவம், ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையேற்று கருத் துரையாற்றினர்.கழக பேச்சாளர் இராம.அன்பழகன் கழக கொள்கைகளை விளக்கியும், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கேரள மாநிலம் வைக்கத்தில் இருந்த கோவி லைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப் பட்ட மக்கள் நடக்க கூடாது என்று சொல்லி அங்கே நடைபெற்ற ஜாதி இழிவையும், அந்த இழிவை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டத் தினையும், தந்தை பெரியார் கைதான பிறகு அவரது மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் போராட்டத்தினை முன்னெடுத்து வெற்றி பெற்றதை விளக்கியும் உரை யாற்றினார். இந்தியாவிற்கே எடுத்துக் காட்டான ஆட்சியாக நடைபெற்று வரும் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், மூடபழக்கங் களை ஒழிக்கின்ற வகையில் ‘‘பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்'' என்ற தந்தை பெரியாரின் கொள்கையை விளக்கி நகைச்சுவை கலந்த சிந்திக்ககூடிய கருத்துகளை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் முக்கரை க.சுடர்வேந்தன் மூடநம்பிக் கைகளை முறியடிக்கின்ற வகையில் ‘மந்திரமா? தந்திரமா?' எனும் அறிவியல் நிகழ்ச்சியினை நடத்தி விளக்கமளித்தார். உரத்தநாடு நகர இளைஞரணி துணை செயலாளர் க.மாதவன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார், மாநில வீரவிளையாட்டு கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் நன்றியுரையாற்றினார்.

திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், ஒன்றிய ப.க. தலைவர் கு.நேரு, மாநில இளை ஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட வழக்குரை ஞரணி செயலாளர் க.மாரிமுத்து, ஒன் றிய விவசாயணி தலைவர் மா.மதியழ கன், உரத்தநாடு ஒன்றிய கிழக்குப் பகுதி செயலாளர் துரை.தன்மானம், ஊரணி புரம் நகர தலைவர் கக்கரை இராம மூர்த்தி, உரத்தநாடு நகர துணை தலை வர் சக்திவேல், ஒக்கநாடு மேலையூர் கிளை கழக செயலாளர் வீரத் தமிழன், ராஜீவ்காந்தி, தென்னகம், பொறியாளர் பாலகிருஷ்ணன், வன்னிப்பட்டு செந் தில், திமுக மேனாள் நகர செயலாளர் சேக்தாவுத், மாவட்ட வழக் குரைஞரணி அமைப்பாளர் தவ. ஆறு முகம் மற்றும் பொதுமக்கள் கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment