நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் கழக தெருமுனைக் கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் கழக தெருமுனைக் கூட்டம்!

தஞ்சை, ஆக.31 28.08.2023 திங்கள் அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி ணி.ஙி. காலனியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, ‘திராவிட மாடல்' ஆட்சி விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் தலைமையேற்று உரையாற்றினார். மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன் பழகன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், அண்ணா நகர் பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலையேற்றனர்.

திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தொடக்கவுரையாற்றினார்.

கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் நூறு ஆண்டு களுக்கு மேனாள் கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற ஜாதி இழிவையும், அதனை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தினையும், தந்தை பெரியார் கைதான பிறகு அவரது மனைவி நாகம்மையார், சகோதரி கண் ணம்மாள் ஆகியோர் போராட்டத்தினை முன்னெடுத்து வெற்றி பெற்றதை விளக்கியும், இந்தியாவிற்கே எடுத்துக் காட்டான ஆட்சியாக நடைபெற்று வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், மூடபழக்கங்களை ஒழிகின்ற வகையில் ‘‘பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும்'' என்ற தந்தை பெரியாரின் கொள்கையை விளக்கி நகைச்சுவை கலந்த சிந்திக்ககூடிய கருத்துகளை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் முக்கரை க.சுடர் வேந்தன் மூடநம்பிக்கைகளை முறியடிக்கின்ற வகையில் ‘‘மந்திரமா? தந்திரமா?'' எனும் அறிவியல் நிகழ்ச்சியினை நடத்தி விளக்கமளித்தார்.

ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். உரத்தநாடு ஒன்றிய மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன்தாஸ் நன்றி யுரையாற்றினார்.

மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநில பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் நா.இராம கிருஷ்ணன்,  கழகப் பேச்சாளர்கள் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, இரா.பெரியார்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளரணி பொருளாளர் போட்டோ மூர்த்தி, மாவட்ட ப.க. துணை தலைவர் ஆ.லெட்சுமணன், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் பெரியார்கண்ணன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கு.குட்டிமணி, மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து, தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப் பாளர் அ.தனபால், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், உரத்தநாடு ஒன்றிய விவசாயணி தலைவர் மதியழகன், தஞ்சை மாநகர பகுத்தறிவாளக் கழக செயலாளர் இரா. வீரக் குமார், தஞ்சை மாநகர துணைத் தலைவர் செ.தமிழ்செல்வன், தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், உரத்தநாடு ஒன்றிய கிழக்குப் பகுதி செயலாளர் துரை. தன்மானம், உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு, உரத்தநாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தங்க.வெற்றிவேந்தன், திருச்சி மூர்த்தி, தஞ்சை மாநகர இளைஞரணி செயலாளர் இராஜராஜன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம், முனைவர் சவுந்தராஜன், ஒக்கநாடு தோழர்கள் தென்னகம், வீரத்தமிழன், ராஜகாந்தி, மகேஸ்வரன், சாமிநாதன், பிரகாஷ், பெரியார் நகர் சக்திவேல், நெடுவாக்கோட்டை லெனின், பெரியார் படிப்பக உறுப்பினர் கு.முருகானந்தம், படிப்பக வாசகர் குழந்தைசாமி, புதிய பேருந்து நிலையம் பகுதி அழகு ராமகிருஷ்ணன், திராவிடச் செல்வன், சங்கராபுரம் பொறியாளர் ஏழுமலை, திமுக மேனாள் மாவட்ட குழு தலைவர் செல்வி சிவஞானம், உரத்தநாடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் நடுவூர் கு.செல்வராசு, கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ராஜலிங்கம், ஆவின் தொமுச தலைவர் மருதவாணன் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment