தேர்தலை மனதில் வைத்தே சமையல் எரிவாயு விலை குறைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

தேர்தலை மனதில் வைத்தே சமையல் எரிவாயு விலை குறைப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை, ஆக. 31- நாடு முழுவ தும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித் துள்ளது. அய்ந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நி லையை மனதில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் எடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள் ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நாடு முழுவதும் வீட்டு உபயோ கத்திற்கான சமையல் எரிவாயு உரு ளையின் விலை ரூ.200 குறைக்கப்பட் டுள்ளதாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. அய்ந்து மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை மனதில் கொண்டு இந்த முடிவை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் எடுத்துள்ளது.

எந்தவித விவாதமும் இல்லாமல் 3 வேளாண் சட்டங்களை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியதை எதிர்த்து, ஓராண்டு காலம் போராடிய விவசாயிகளை சந் தித்து குறைகளைக் கேட்க முன் வராத கொடூரமான ஆட்சியை நடத்திய பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத் தேர்தலை மனதில் கொண்டு 3 வேளாண் சட்டங்களை யும் திரும்பப் பெற்றார். அதைப்  போலத்தான் இப்போதும் விலைக் குறைப்பு நாடகத்தை நடத்தியிருக் கிறது.

கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோலியப் பொருட்க ளின் விலையை பா.ஜ.க. அரசு குறைக்கவில்லை. மாறாக, கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கலால் வரியாக 32 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்து கஜானாவை நிரப்பிக் கொண்டது.

இதன்மூலம், மக்கள் மீது சுமையை ஏற்றி கடுமையான பாதிப்பை ஏற்படுத் தியது. 2014இல், மே மாதத்தில் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 9.48ஆக இருந்தது தற்போது, ரூபாய் 19.90 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, டீசல் மீது ரூபாய் 3.56ஆக இருந்தது, தற்போது ரூ.15.80 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கலால் வரியை உயர்த்தி கஜா னாவை நிரப்புவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருந் தது. 

அந்த அடிப்படையில் தான் சமையல் எரிவாயு உருளையின் விலை 2014இ-ல் ரூ.400 ஆக இருந்தது, பா.ஜ.க. ஆட்சியில் 9 ஆண்டுகளில் ரூ.1118.50ஆக கடுமையாக உயர்த்தப் பட்டது. தற்போது ரூ.200 குறைத்திருப் பது யானை பசிக்கு சோளப் பொறி போட்டதாகத் தான் கருத வேண் டும்.

ஒருபக்கம் 3 இலவச சமையல் எரிவாயு, 5 கிலோ அரிசி இலவச மாக வழங்குவதாக கூறுகிற பா.ஜ.க. ஆட்சி யில் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை 125இ-ல் இருந்து 145 ஆக உயர்ந்துள் ளது. அதேநேரத்தில், 84 சதவிகித மக்க ளின் உண்மையான வருமானம் கடுமையாக சரிந்துள்ளது. 

இந்தியாவின் கடன் 2014-இல் 55 லட்சம் கோடியாக இருந்தது, இப்போது 155 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி யில் மட்டும் ரூ.100 லட்சம் கோடி கடன் அதிகரித்திருக்கிறது. இதை விட பொருளாதாரப் பேரழிவுக்கு வேறு சான்று கூற முடியாது.

2014_20-15 முதல் கடந்த 9 ஆண்டுகளில் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளின் மூலமாக ரூபாய் 14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி கார்ப்பரேட்டுகளின் கடன் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதில், முக்கிய தொழிலதிபர்களின் கணக்கில் ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரத்து 968 கோடி என்று ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங் கள் கூறுகிறது.

இதன்மூலம் பா.ஜ.க. ஆட்சி யாருக்காக நடைபெறுகிறது என் பதை தெளிவாகப் புரிந்து கொள் ளலாம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங் கப்படும் என்று வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத வகையில் 23 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

ஆனால், கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றாததை திசைத் திருப்புகிற நோக்கத்தில் ராமர் கோவில் கட்டுவோம், அரசமைப் புச் சட்ட உறுப்பு 370 ரத்து செய் வோம், மணிப்பூர் மாநிலத்தில் வகுப்புவாத கலவரத்தை தூண்டி விடுவோம் என வெறுப்பு அரசி யல் மூலம் வாக்கு வங்கியை விரிவு படுத்துகிற முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

ஆனால், கடுமையான பொரு ளாதார நெருக்கடியில் சிக்கி வாங்கும் சக்தியை இழந்து வாழ் வாதாரத்திற்காக போராடி வரு கிற மக்கள், 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அரசுக்கு உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார் கள். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment