உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பணி நியமனங்களில் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடுக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தி திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் கருத்தரங்கம் மதுரை தமிழ்நாடு தங்கும் விடுதியில் சிறப்புடன் நடைபெற்றது. மேனாள் நீதியரசர் அரி. பரந்தாமன், தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ (எம்.பி.), தி.மு.க. உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் உரிமை மீட்பு உரையாற்றினார். தமிழர் தலைவருக்கு விழா குழுவின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழக்குரைஞர்கள் மு. சித்தார்த்தன், நா. கணேசன், த. வீரசேகரன், வீ.ரா. கதிரவன், இரா. பாஸ்கரன், வீரமர்த்தினி, கரூர் மு.க. ராஜசேகரன், ச. பாஸ்கர், அமர்சிங், பூவை. புலிகேசி, நிம்மதி ஆகியோர் வழங்கினர். (மதுரை, 18.8.2023)
Sunday, August 20, 2023
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி கருத்தரங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment