மும்பையில் கூடுகிறது முக்கியத்துவம் வாய்ந்த 'இந்தியா' கூட்டணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

மும்பையில் கூடுகிறது முக்கியத்துவம் வாய்ந்த 'இந்தியா' கூட்டணி

புதுடில்லி, ஆக.30 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளு மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சி அரியணையில் உள்ள பாரதீய ஜன தாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன.

அய்க்கிய ஜனதாதள தலை வரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை தீவிர மாக செய்து, தனது மாநிலமான பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி னார். எதிர்க்கட்சிகளை ஒருங் கிணைக்கும் அறிமுக அளவில் அமைந்த இந்த கூட்டத்தில், 16 கட்சிகள் பங்கேற்றன. அடுத்த தாக கடந்த மாதம் 17, 18-ஆம் தேதிகளில் கருநாடக மாநில தலைநகர் பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற் றன. இது எதிர்க்கட்சியினருக்கு புது தெம்பை அளித்தது. பெங் களூரு கூட்டத்தில் எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிடப்பட்டது. கூட் டணிக்கு வைக்கப்பட்ட இந்த பெயர் நாடு முழுவதும் மக்களை சென்று அடைந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. 

மும்பையில் 3ஆவது கூட்டம்

இந்த நிலையில் எதிர்க்கட்சி களின் 3-ஆவது கூட்டம் மராட் டிய மாநில தலைநகர் மும்பையில் 31.8.2023 அன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த கூட் டத்திற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மும்பையில் குவிகிறார்கள். மும்பையில் உள்ள 'கிராண்ட ஹயாத்' உயர் தர விடுதியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேனாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக் கரே ஆகியோர் கலந்து கொள் வது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதவிர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் (அய்க்கிய ஜனதா தளம்), மேற்குவங்க முதலமைச்சர் மம்தா  (திரிணாமுல் காங்கிரஸ்), டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் (ஆம் ஆத்மி), ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்சா) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார். இது தவிர ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ள உள்ளனர். 

கட்சிக்கு 3 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் ஆளும் கருநாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநில முதலமைச்சர்கள் 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது. முதல் 2 கூட்டங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தன. ஆனால் 3ஆ-வது கூட்டம் பார திய ஜனதா கூட்டணி ஆளும் மராட்டியத்தில் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் முதல் 2 கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் வியூகம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்பட வில்லை. ஆனால் மும்பையில் நடைபெறும் 3-ஆவது கூட்டம் "இந்தியா" கூட்டணிக்கு முக்கியத் துவம் வாய்ந்ததாக அமைய உள்ளது. கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான காங்கிரஸ் பல மாநிலங்களில், மாநில கட்சி களுடன் முரன்பட்ட இருந்த நிலை மாறி, அந்த கட்சிகள் எல்லாம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளன. 

முக்கிய வியூகம்

மும்பை கூட்டத்தில் நாடா ளுமன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பான முக்கிய வியூகம் வகுக்கப்பட உள்ளது. குறிப்பாக தொகுதி பங்கீடு தொடர்பாக விரிவாக விவாதிக் கப்படும் என்று சொல்லப்படு கிறது. தொகுதி பங்கீடு விவ காரம்தான் "இந்தியா" கூட் டணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  

 மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒருங் கிணைப்பு குழுவின் தலைவரும் இறுதி செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணியின் இலச்சினையும் இந்த கூட்டத்தில் வெளியிடப் படுகிறது. கடந்த தடவை பங்கேற்ற கட்சிகளின் எண் ணிக்கையை விட மும்பை கூட் டத்தில் கூடுதலாக சில கட்சிகள் சேரும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment