தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் பதவி நியமனம்: ஆளுநரின் மோதல் போக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் பதவி நியமனம்: ஆளுநரின் மோதல் போக்கு

சென்னை, ஆக. 23 - டி.என்.பி. எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நிய மனம் தொடர்பான ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழ்நாடு அரசு பரிந் துரைத்து கோப்புகளை அனுப் பியது.

நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம் பரப்படுத்தப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப் படவில்லை என்றும் டி.என். பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் ஆளுநர் கேட்டுள்ளார்.

No comments:

Post a Comment