அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி


மதுரை, ஆக 5
அ.தி.மு,க. மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது "ஓ,பன்னீர்செல்வம் எங்களுடன் தான் இருக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் அ.தி.மு.க.வை தொடர்ந்து காலைவாரிக் கொண்டு தானே இருக்கிறார்" என்று கேட்டனர். அதற்கு செல்லூர் ராஜூ, "அண்ணா மலைக்கும் எங்களுக்கும் என்ன இருக்கிறது? அவர் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர். அவ்வளவுதான். எங்களுக்கு மோடி ஜி, நட்டா ஜி, அமித்ஷா ஜி தான் என்றார். மேலும் செல்லூர் ராஜூ, "டில்லியில் நடந்த கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி, எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டார். எங்களது பெருமை பிரதமர் மோடிக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் இங்குள்ள அண் ணாமலைக்கு தெரியவில்லை. நாம் என்ன செய்வது?" என்றும் கூறினார்.

செல்லூர் ராஜூவின் இந்த கருத்து குறித்து பாத யாத்திரை செய்து கொண்டு இருந்த அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் என்றார்.

அண்ணாமலையின் இந்த கருத்து குறித்து செல்லூர் ராஜூ நேற்று (4.8.2023) கூறியதாவது:- பா.ஜனதா ஒரு தேசியக் கட்சி. அந்த கட்சியின் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை எல்லாம் அதன் தேசிய தலைவர்கள்தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில்தான் எங்களுக்கு மோடி, நட்டா, அமித்ஷா முக்கியம் என்றேன். நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னைக் கூறுகிறார். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லோருக் கும் தெரியும். கட்சியில் சேர்ந்து ஓர் ஆண்டில் தலைவராக பதவியேற்று இருக்கிறார். ஆனால் நான் அப்படி அல்ல. ஆரம்பத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர், வட்ட செய லாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆனேன். அதே போல் மக்கள் பதவிகளில் கவுன்சிலர், மாநக ராட்சி எதிர்க்கட்சி தலைவர், அதன்பின் அமைச்சர் ஆனேன். இன்றைக்கு அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக பதவி வகிக்கிறேன். எனக்கு எல்லா பதவிகளும் படிப்படியாக தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன். என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். என்னை பொறுத்தவரை அண்ணாமலையின் கருத்துகளைநான் பொருட்படுத்துவதில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம். தமிழ்நாட்டில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. தான். அதே போல் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரு கட்சி அ.தி.மு.க. தான். எனவே அ.தி.மு.க.வை விமர்சிப்பவர்கள், தமிழ்நாட்டில் அரசி யலில் தங்களுக்கான இடம் என்ன? என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment