கடவுள் சக்தியைப் பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 16, 2023

கடவுள் சக்தியைப் பாரீர்!

நிலச்சரிவு: சிவன்கோவிலில் கூடியிருந்த மக்கள் மண்ணில் புதைந்தனர்

சிம்லா, ஆக. 16 -  இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன்கோவில் ஒன்றில் கூடியிருந்த மக் கள் நிலச்சரிவு காரணமாக புதையுண்டனர்.

இதனால் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ஹிமாச்சல்பகு தியின் தலைநகர் சிம்லா விற்கு அருகில் கனமழை கொட்டியது. இதனால் மர்ஹில் மற்றும் பாக்லி ஆகிய இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. குறிப் பாக சம்மர்ஹில்லில் உள்ள சிவன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டு இருந்த போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மட்டும் 11 பேர் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 10 பேர் இடி பாடுகளுக்குள் சிக்கியி ருக்கலாம் என்று கருதப் படுகிறது. 

இதற்கிடையே தலை நகர் சிம்லாவின் கிருஷ்ணா நேற்று திடீரென நிலச் சரிவு ஏற்பட்டது. இதில், 8 வீடுகள் மண்ணில் புதைந்தன. அந்த வீடுக ளில் இருந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். நேற்று இரவு 10 மணி வரை 2 பேரின் சடலங்கள் மீட் கப்பட்டன. மேலும் பலர் மண்ணில் புதைந்து கிடப் பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment