கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை!
வடக்குத்து, ஆக. 15- அனைத்து பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா கடலூர் மாவட்டம் வடக்குத்து எஸ்.கே.எஸ். திருமண மண்ட பத்தில் 13.8.2023 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாயவேல் முன்னிலையில் நடை பெற்றது.
கிழக்கு மண்டல தலைவர் பழனிவேலு வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் பிரான்சிஸ், துணைச் செயலாளர் ராஜசேகர் சிவா, மாவட்ட பிரதிநிதி கலையரசன், மாநிலத் தலைவர் சதுரகிரி, பொதுச்செயலாளர் சித்திக் அலி, பொருளாளர் சுபாஷ், ஒருங்கிணைப்பாளர் தாசன் மற் றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செய லாளர் சிந்தனை செல்வன் ஆகி யோர் அரசின் கவனத்திற்கு சங்கத் தின் கோரிக்கைகளை கொண்டு செல்வதாக கருத்துரை ஆற்றினார் கள்.
பிரகாஷ், ராமச்சந்திரன், பால முருகன், செந்தில் குமார், ஞான வேல், வெங்கடேசன், செந்தமிழ், திராவிடர் கழக நிர்வாகிகள் மணிவேல், மோகன், டிஜிட்டல் ராமநாதன், முருகன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
அனைத்து பெயின்டர்கள் மற்றும் ஓவியர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தும் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன மாவட்ட பொரு ளாளர் பிரதாப் நன்றி கூறினார்
No comments:
Post a Comment