அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க: தலைமைச் செயலாளர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 14, 2023

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க: தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை, ஆக. 14 - தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப் படை வசதிகள் உள்ளனவா என்ப தனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்க ளுக் கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள் ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாதுகாக்கக் கூடிய குழந்தைகளின் நலனை உறுதி செய்வதில் அங்கன் வாடி மய்யங்கள் மற்றும் குழந் தைகள் நல சேவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அனைவரும் அறிவீர்கள். இந்த மய்யங்கள் மிகுந்த செயல் திற னுடன் செயல்படுவதையும், மய்யங் களின் பராமரிப்பில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக் கியமான வளர்ப்புச் சூழலை வழங்குவதையும் உறுதி செய்வது என்பது அரசினுடைய முக்கிய கடமய்யாகும்.

இந்த மய்யங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு புகலிடங்களாகச் செயல்படுகின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி மற்றும் அத்தகைய வாய்ப்புகள் கிட்டாத குழந்தைகளுக்கு அவர் களின் நிலை அறிந்து சேவை செய்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

இத்தகைய அங்கன்வாடி மய் யங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் கள் அவ்வப்போது ஆய்வு மேற் கொள்வது என்பது மிக முக்கிய மானதாகும். இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும் போது அங்கன் வாடி மய்யங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை சரியான முறையில் அளவிடவும், அம்மய் யங்களின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை நல்வழிபடுத்திட வழிவகை செய்வதுடன் இதனால் பின்வரும் இனங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறது.

அதன்படி அங்கன்வாடி மய்ய கட்டட நிலை:

கட்டடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, சாத்தியமான அபாயங்கள் அல்லது கட்டமைப்பு சிக்கல்கள் ஆவணப்படுத்தி அதை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கழிப்பறை வசதி

அங்கன்வாடி மய்யத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதார மாகவும், தூய்மையாகவும் உள் ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கிருமி நாசினி தெளித்து பராமரிப்பது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும்.

தண்ணீர் விநியோகம்

அங்கன்வாடி மய்யத்துக்குள் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

புகையில்லா அடுப்பு

அங்கன்வாடி மய்யங்களில் எரி வாயு கலன்கள் மூலம் உணவு சமைப்பதை உறுதி செய்ய வேண் டும். புகையில்லா சமையல் சுவாச பிரச்சினைகளை தடுக்கவும், ஆரோக்கியமான சூழலை பரா மரிக்கவும் வழி வகுக்கும்.

அங்கன்வாடி மய்ய சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அது குறித்தான ஓவியங்கள்: 

பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந் தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழந்தை ஆரோக் கியம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாசகங் கள் மற்றும் அது குறித்தான ஓவியங்கள் வர்ணம் தீட்டி இடம் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தாய்மார்களுடன் சிறிது நேரம் உரையாடுவதும், மய்யத்தைப் பற்றிய அவர்களின் கருத்தை தெரிந்து கொள்ளுதல். உள்ளூர் பிரதிநிதிகள் அங்கன்வாடி மய்யங் களின் முக்கியத்துவத்தை அறிந்து அவ்வப்போது மய்யங்களின் தேவைகளை அரசுக்கு தெரிவிப் பதை உறுதி செய்ய வேண்டும்.

அங்கன்வாடி மய்யங்கள் மூலம் வழங்கும் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப் போது ஆய்வு மேற்கொண்டு இந்நடவடிவக்கை தொடர்பான அறிக்கையை அரசினுடைய மேலான கவனத்துக்கு கொண்டு செல்வதையும் உறுதி செய்ய வேண்டும்" என்று அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment