புதுடில்லி, ஆக.11 மக்க ளவை காங்கிரஸ் தலை வர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நம்பிக்கையில்லா தீர் மானத்தின் மீதான விவா தத்தில் நேற்று பேசுகை யில், ‘‘மோடி 100 முறை வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும். அதைப் பற்றி கவலையில்லை. ஆனால் காங் கிரஸ் கட்சி எப்போதுமே இந்த நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டிருக் கும். காந்தியார் 1942 இல் வெள்ளையனே வெளி யேறு இயக்கத்தை கொண்டு வந்தார். இப் போது, பிரித்தாளுதல், மதவாதம், காவிமயமாக் கலை இந்த நாட்டை வெளியேற்ற வேண்டிய நேரம் இது.
மணிப்பூரில் நடக்கும் வன்முறைகள் சிறிய பிரச் சினை அல்ல. அது இன வன்முறை. உள்நாட்டு போர். இதில் பிரதமரின் தலையீடு இன்றியமையா தது. அதற்காகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மா னம். ஹஸ்தினாபூரிலோ அல்லது மணிப்பூரிலோ பெண்களுக்கு எதிராக என்ன நடக்கிறது என் பதைப் பற்றி மன்னர் பாராமுகமாக இருக்கக் கூடாது’’ என மகாபார தத்தை ஒப்பிட்டுப் பேசி னார். இதற்கு அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித் தார். பிரதமர் பற்றி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண் டுமென ஒன்றிய அமைச் சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
No comments:
Post a Comment