அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி முன் பணத்தொகை அதிகரிப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி முன் பணத்தொகை அதிகரிப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஆக .25  அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில முன்பணம் தொகை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன் றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்;- 

13.06.1979இல் பிறப் பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர் களின் குழந்தைகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் ரூ.1000 பல்தொழில் நுட்ப கல்வி பயில்வதற்கு ரூ.500 வழங் கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி முறையே ரூ.1000லிருந்து ரூ.1500 ஆகவும், ரூ.500 லிருந்து ரூ.750ஆகவும் 01.12.1988 இ-ல் அர சாணை வெளியிடப் பட்டது.  

இதன் தொடர்ச்சி யாக 23.03.1993இல் மீண் டும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில் தொழில் முறை கல்வி ரூ.1,500லிருந்து ரூ.2,500, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.1,500 லிருந்து ரூ.2000, பல்தொழில் நுட்ப கல்லூரி ரூ.750 லிருந்து ரூ.1,000 ஆகவும், அரசாணை வெளியிடப் பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகை கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தற் போது அரசு உயர்த்தி ஆணையிடப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-2024 கல்வி ஆண்டி லிருந்து வழங்கப்படும். 

* தொகுதி சி மற்றும் டி ஊழியர்களுக்கு, ஒரு மாத அடிப்படை ஊதி யத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும். 

 தொகுதி ஏ மற்றும் பி அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதி யத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப் பட்ட வரம்புகளில் எது அதிகமோ அந்த தொகை அனுமதிக்கப்படும்.  அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையில்  தொழில் முறைக் கல்வி ரூ.2,500 லிருந்து ரூ.50,000, கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ.2,000 லிருந்து ரூ.25,000, பல்தொழில் நுட்ப கல்லூரி ரூ.1,000லிருந்து ரூ.25,000 தற் போது உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment