தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கரோனா இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கரோனா இல்லை

சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் நேற்று (20.8.2023) 644 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று ஒருவருக்கும், கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று கரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆக உள்ளது. இதைபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment