அடுத்த ஆய்வு சூரியன் : இஸ்ரோ அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

அடுத்த ஆய்வு சூரியன் : இஸ்ரோ அறிவிப்பு

பெங்களுரு, ஆக.25 நிலவைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகி றோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். 

சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவ மேற்பரப் பில்  23.8.2023 அன்று  தரையிறங்கியது. அதை யடுத்து பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப் பாட்டு மய்யத்தில் இஸ் ரோ தலைவர் எஸ்.சோம் நாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ மிகப் பெரிய ஒரு திட்டத்தை கூட்டு முயற்சியால் வெற்றி பெற வைத்துள் ளது. பல்வேறு சோதனை களுக்கு இடையில் இந்த சாதனையை இஸ்ரோ அறிவியல் ஆய்வாளர் கள் குழுவினர் படைத் துள்ளனர். குறிப்பாக 'சந்திரயான்-3'-அய் சுமந்து சென்ற ராக்கெட் ஏவுதல், விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிந்தது, தரையி றங்கியது உள்ளிட்ட பல்வேறு சவ £ல் கள் முடிக்கப்பட்டுள் ளன.

அடுத்து சூரியன் ஆய்வு

லேண்டரில் இருந்து பிரிந்து சென்ற ரோவர் ஒரு சில மணி நேரங்களில் நிலவில் கால் பதித்து தன்னுடைய 14 நாட்கள் ஆய்வுப்பணியை தொடங்கும். நாடு முழு வதும் உள்ள பள்ளிகளில், கிராமங் களில், லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சி ஒளிபரப்பு செய் யப்பட்டது.  

அடுத்து இதேபோன்று சூரியனை ஆய்வு செய்யும் 'ஆதித்யா எல்-1' என்ற விண் கலம் விண்ணில் அனுப்பப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மனிதனை விண்ணுக்கு அனுப் பும் ககன்யான் திட்டத்துக் கான சோதனை ராக் கெட் செப்டம்பர் கடைசி அல்லது அக் டோபர் முதல் வாரத்தில் ஏவப்பட உள்ளது என்று அவர் கூறினார். இது குறித்து திருவனந்தபுரத் தில் உள்ள திரவ உந்து அமைப்புகள் மய்யத்தின் (எல்.பி.எஸ்.சி.) இயக்குநர் நாராயணன் கூறும் போது, 'சந்திரயான்-3' விண் கலம் வெற்றிகரமாக விண் ணில் ஏவப்பட்ட தற்கும், விண்கலத்தை வெற்றிகரமாக நிலவு சுற்றுவட்ட பாதைக்கு அழைத்துச் சென்றது உள் ளிட்ட பல்வேறு பணிகளை செய்து சாதனை படைத்ததற் கும், இஸ்ரோ குழுவி னருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என் றார். அப்போது அறிவியல் ஆய்வாளர் முருகன் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment