கருணை அடிப்படையில் 457 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

கருணை அடிப்படையில் 457 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக.5  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாக இயக்கு நரகம், பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் 100 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 130 நபர்களுக்கும், என மொத்தம் 457 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை  வழங்கினார்.

 மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து  உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப் பட்ட குடிநீர் வழங்குதல், நகர்ப்புற வசிப்பி டங்களில் உள்ள மக்க ளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற ஏழைகளுக்கு குடி யிருப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொண்டு வருகிறது. 

முக்கியத்துவம் வாய்ந்த இந்துறையின் பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடைபெற இந்த துறையில் ஏற்கெனவே பணியாற்றிய நபர்கள் அவர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்ததன் காரணமாக, கருணை அடிப்படையில் அவர்களின் வாரிசுகளுக்கு பணியினை வழங் குவது வழக்கம். 

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 227 பணி யாளர்களின் வாரிசுதாரர்களுக்கு சாலைப் பணியாளர்கள் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 84 பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 21 நபர்களுக்கு இளநிலை உதவியாளர், 22 நபர்களுக்கு வருவாய் உதவியாளர், 4 நபர்களுக்கு பணி ஆய்வாளர், 22 நபர் களுக்கு தொழில்நுட்ப உதவியாளர், 15 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். 

பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் பணி புரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 3 நபர்களுக்கு பில் கலெக்டர், 4 நபர்களுக்கு இளநிலை உதவியாளர், 3 நபர்களுக்கு அலுவலக உதவியாளர், என தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் பணியின் போது இறந்த 130 ஊழியர்களின் வாரிசுகளில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் வலை வரைவு அலுவலர் 13 பேர், இளநிலை நிலை 32 பேர் உதவியாளர், ஓட்டுநர் 9 பேர், பதிவாளர் 41 பேர், 35 காவலர் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் உத்தரவுகள் மொத்தம் 457 ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கியதன் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச் சியில் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர்.பிரியா மற்றும் தலைமைச் செயலாளர்  சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment