சென்னை, ஆக.10- தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் இன்று (10.8.2023) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஆகஸ்ட் 10 - ஆதிக்க ஹிந்திக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது.
இனமானம் காக்கவும் - மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று திறந்து வைத்தேன். பேராசிரியப் பெருந்தகையின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும் - பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது. கல்வியில் - பகுத்தறிவில் - சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப பேராசிரியப் பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம்.
-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாவிலன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment