பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வாம்!

புதுடில்லி, ஆக. 24 புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024ஆ-ம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித் துள்ளது.  மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் நடத்தப்படும் இரண்டு பொதுத் தேர்வுகளில், எதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதனை பயன்படுத்திக் கொள்ள லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் இரண்டு மொழிப் பாடங்களை படிக்க வேண்டுமென்றும், அதில் ஒன்று கட்டாயம் இந்திய மொழியாக இருக்க வேண்டு மெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment