நாகையில் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு (திருமருகல் நத்தம்) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

நாகையில் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு (திருமருகல் நத்தம்)

திருமருகல், ஜூலை 10 நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், நத்தம் சி.பி. கண்ணு நினைவரங்கில் 09.07.2023 நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் மாணவர்களை பாராட்டிப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட் டனர்.

பயிற்சியில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த  ஆண்கள், பெண்கள் 130 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்,  பெரியாரியல்  பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி மாணவர்களை பாராட்டி உரை நிகழ்த்தினார்.

சிறப்பாக குறிப்பு எடுத்த மாணவர்கள் ஒக்கூர் ர.மோனிஷா, செம்பியந்தி சு.தீபிகா, கொட்டாரக் குடி அ.அகிலன், நத்தம் சி.அருண்குமார் ஆகிய மாணவர்களை பாராட்டி திருக்குவளை திராவிடர் கழக நகர தலைவர் மோகன் குமார் மாணவர்களுக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இல. மேக நாதன் அனைத்து மாணவர்களுக் கும் மதிய உணவு விருந் தளித்தார். அனைத்து மாணவர்களுக்குமான நுழை வுக் கட்டணத்தினை நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார் ஏற்றுக்கொண்டு வழங்கினார். காலை யில் தேநீர் விருந் தினை மாணவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.செல்வராசும், மாலையில் நாகை நகர அமைப்பாளர் ரவியும்  வழங்கி சிறப்பித்தனர்.

பயிற்சி பட்டறையை தலைமைக் கழக அமைப் பாளார் சு.கிருஷ்ண மூர்த்தி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, பகுத் தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்  இரா.சிவக்குமார், மாநில இளைஞரணி து.செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில  சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், மாவட்ட பொறுப் பாளர் பொன்.செல்வராசு, நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார், மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயபிரியா, திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னதுரை, கீழையூர் ஒன்றிய தலைவர் ரெ.ரெங்க நாதன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் தியாக சுந்திரம், மண் டல பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர்  முத்துகிருஷ்ணன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் மு.குட்டிமணி, ஒன்றிய செயலளார் கொட்டாரக்குடி ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் ஒக்கூர் ராஜேந்திரன், நாகை நகர அமைப் பாளர் ரவி, அறிவிழி மங்கலம் சுரேஷ், நத்தம் நா.கண்ணகி, ரா.ரம்யா ஆகியோர் பங்கேற்று சிறப்பாக நடத்தினர்.  பயிற்சி வகுப்பின் இறுதியில் மேலபூதனூர் அபி னேஷ், திருப்புகலூர் சுருதி, கொட்டாரக்குடி ரஞ்சனி, நத்தம் அறிவாளன் ஆகிய மாணவர்கள் பயிற்சி வகுப்பு எப்படி பயனுள்ளதாக இருந்தது என சிறப்பாக எடுத்துரைத்தனர்.

பள்ளியில் பயிலும் பெண்கள்  59, ஆண்கள் 41 , கல்லூரி பயிலும் பெண்கள் 16, ஆண்கள் 14 மாணவர் களும் பங்கேற்று மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மாலை 6.00 மணியள வில் நிறைவடைந்தது.


No comments:

Post a Comment