மதுரை ஜூலை 19 - வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் வீரசிகா மணியை சேர்ந்த மாரியப்பன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த, மனுவை விசாரித்து நீதிபதி கள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு, மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகையை மதுரையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இதற்காக உயர் நீதி மன்ற பதிவாளர் "கலைஞர் நூலகம்" பெயரில் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.
இந்த வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்க பயன்படுத்த வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment