அசல் காட்டுமிராண்டித்தனம் - காதல் திருமணம் செய்து கொண்ட இணையர் வெட்டிக்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

அசல் காட்டுமிராண்டித்தனம் - காதல் திருமணம் செய்து கொண்ட இணையர் வெட்டிக்கொலை

திருச்சி, ஜூலை 4- திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித் தெருவை சேர்ந்த வர் ராஜ்குமார் (வயது 29). இவரும், அருகே உள்ள சோபனாபுரத்தை சேர்ந்த சாரதா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்த இணையருக்கு குழந்தை இல்லை. விவசாயியான ராஜ்குமார் நெல் அறுவடை எந்திரத்தின் ஓட்டுநராகவும் உள்ளார். தற்போது, அவர் வைக்கோல் சுற்றும் எந்திரமும் வாங்கி உள்ளார். அதுமட்டு மின்றி சோபனாபுரம் பகுதியை சேர்ந்த விஜயசேகரன் என் பவரது 4 ஏக்கர் தோட் டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. ராஜ்குமார் அந்த வீட்டில் தங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் (2.7.2023) ராஜ்குமார் பி.மேட்டூர் பகுதியில் வைக்கோல் சுற்றும் பணிக்கு மனைவி சாரதாவுடன் சென்று இருந்தார். பின் னர் வேலை முடிந்ததும் இரவு இணையர் இருவ ரும் தோட்டத்து வீட்டில் தங்கினர். இந்த நிலையில் நேற்று (3.7.2023) காலை 10 மணியளவில் விஜயசே கரன் தோட்டத்து வழி யாக இரு சக்கர வாகனத் தில் சென்றார். 

அப்போது, ராஜ்குமா ரும், சாரதாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக உப்பி லியபுரம் காவல் நிலையத் தில் புகார் செய்தார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமை யில் காவல் துறையின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். 

முதல்கட்ட விசார ணையில் தோட்டத்து வீட்டின் வராண்டாவில் கயிற்றுக்கட்டிலில் இணையர் இருவரும் படுத்து தூங்கி உள்ளனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் அவர் களது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.

இருப்பினும் கொலை யாளிகள் யார்? கொலைக் கான காரணம் என்ன? என்ற விவரங்கள் தெரிய வில்லை.

இது தொடர்பாக உப்பிலியபுரம் காவலர் கள் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரண மாக இணையர் வெட்டிக் கொலை செய்யப்பட் டார்களா? கொடுக்கல்-வாங்கல், முன்விரோதம், நிலப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்க ளால் கொலை செய்யப் பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மேலும் தோட்டத்து வீட்டுக்கு செல்லும் பிர தான சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி சந்தேகப்படும் வகையிலான நபர்கள் குறித் தும் விசாரித்து வருகின் றனர். இந்த கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின் றனர். காதல் இணையர் வெட்டிக் கொலை செய் யப்பட்ட நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment