தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை, ஜூலை 7  தமிழ்நாட்டில் 2 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக அய்.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் அவ்வப்போது பணி யிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் இந்த நடவடிக்கையை மேற் கொள்வார்.  அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் முக்கியத் துறைகளின் செய லாளர்கள் உள்பட அய்.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். அதன்படி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு இருப்ப தாகவும் வருவாய் துறை இணை ஆணையர் சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment