அமலாக்கத் துறையினரை மணிப்பூர் அனுப்பினால், கலவரக்காரர்கள் பா.ஜ.க.வில் இணைந்துவிடுவார்கள் உத்தவ் தாக்கரே கிண்டல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

அமலாக்கத் துறையினரை மணிப்பூர் அனுப்பினால், கலவரக்காரர்கள் பா.ஜ.க.வில் இணைந்துவிடுவார்கள் உத்தவ் தாக்கரே கிண்டல்

மும்பை, ஜூலை 11 - மகாராட்டிரா மாநிலத்தின் மேனாள் முதலமைச் சரும், சிவ சேனா கட்சியின் (ஹிஙிஜி) தலைவருமான உத்தவ் தாக்கரே யவத்மால் மாவட்டத்தில் நடை பெற்ற பேரணியில் பேசியதாவது:- 

துரோகிகள் மற்றும் பயனற்ற வர்கள் மகாராட்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த வகை யான அரசியல் வீழ்ச்சி அடையும். ஏனென்றால், மகாராட்டிரா துரோகிகளால் ஆட்சி செய்யப் படும் மாநிலமாக பார்க்கப்படு கிறது. அவர்களை மக்கள் அனும திக்க மாட்டார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் முன்ன தாக பிரதமர் மோடி பேசும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சொன்னார். தற்போது அந்த கட்சியை தன்னுடன் இணைத்து உள்ளார். இதனால் 70 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித் தவர்களுடன் பிரதமர் மோடி பிம்பம் பிரதிபலிக்கும். இந்த இந் துத்வா உங்களுக்கு சரியாக தோன் றுகிறதா?.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக் கிறார்.

ஆனால் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூருக்கு அவர் செல்ல வில்லை. மணிப்பூர் வன்முறை குறித்து ஒரு வார்த்தை கூட பேச வில்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை, சிபிஅய், வருமான வரி சோதனை அமைப்புகளை மணிப்பூருக்கு அனுப்புங்கள். மணிப்பூரை எரித் துக் கொண்டிருப்பவர்கள் தானாக உங்கள் கட்சியில் இணைந்து விடு வார்கள். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.


No comments:

Post a Comment