காமராஜரும் - பெரியாரும் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

காமராஜரும் - பெரியாரும் கருத்தரங்கம்

சென்னை, ஜூலை 16 - பகுத்தறிவாளர் கழக மாதாந்திரக் கூட்டம் 8.7.2023 - சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு, அன்னை மணியம்மையார் அரங்கில் நடந்தது. 

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீரமணி ராஜீ வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் நா.சுலோச்சனா தலைமையுரை ஆற்றினார்.

செய்தித் தொடர்பாளர், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி இனியன் ராபர்ட், “காமராஜரும் - பெரியா ரும்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அவர் உரையில்: இவர்களின் நட்பு பற்றியும், இவர்களால் நாடு பெற்ற நன்மைகள் பற்றியும் விரிவாகப் பேசி னார். சிறப்பாக இருந்தது. புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment