கூடுவாஞ்சேரியில் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

கூடுவாஞ்சேரியில் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி

சென்னை, ஜூலை 14 - பணிபுரியும் மகளிர் விடுதி களின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுவாஞ்சேரியில் 7 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சியில் 5 கோடியே 65 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவிலும் 226 மகளிர் தங்கும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த 2 புதிய மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.7.2023) திறந்து வைத்தார். 

மேலும், அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.  உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் இத்தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment