மேகதாது பிரச்சினை: காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 3, 2023

மேகதாது பிரச்சினை: காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை, ஜூலை 3 - மேகதாது அணை தொடர்பாக டில்லியில் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். டென்மார்க்கிற்கு அரசு முறை பயணமாக சென்ற தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், செய்தியாளர்க ளிடம்  கூறியதாவது:- 

நீர்வளத்துறையில் எப்படி சிக்க னத்தை பயன்படுத்துவது? நீர்வளத் துறையில் நீரை எப்படி பாது காப்பது? என்பதில் உலகத்திலேயே முன்னோடியமாக இருப்பது டென் மார்க். டென்மார்க் போல் தமிழ் நாட்டிலும் நீர்வளத்தை சீரமைக்க வேண்டும் என்பதால், இது குறித்து டென்மார்க் அரசிடம் பேச விரும் பினோம். 

டென்மார்க் நீர்வளத் துறை அமைச்சரிடம் தமிழ் நாட் டின் நிலைமையை எடுத்து கூறினோம். கனிவாக கேட்டனர். ஒரு வார காலத்தில் டென்மார்க் அதிகாரிகள் சென்னை வர உள்ளனர்.

தமிழ்நாடு அரசு அதிகாரிக ளிடம் பேசி பின்னர் திட்டம் வகுக்கப்படும் என்ற உறுதியுடன் உள்ளோம். டென்மார்க் பயணம் பயனுள்ளதாக இருந்தது. ஆறுக ளில் எங்கு பார்த்தாலும் தாமரை கள் பரந்து விரிந்து கிடக்கிறது. அதைக் கூட டென்மார்க்கில் எடுத்து எருவாக்கி உள்ளனர்.

காவிரி நிர்வாகத்தை, காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பிடம் உச்ச நீதிமன்றம் ஒப் படைத்து உள்ளது. வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப் பட்டுள்ளது. கருநாடகாவில் இருக்கக் கூடிய நீர்நிலைமை என்ன? என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் தமிழ்நாடு அரசு, கருநாடக அரசி டம் பேச முடியாது. பேசினாலும் அது சட்டப்படி தப்பு. அது முடிந்து போன விவகாரம்.

முதலமைச்சரை  சந்திக்க உள் ளேன். நானே டில்லி சென்று காவேரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளேன். எந்தக் காரணத்தை கொண்டும் மேகதாதுவில் அணை கட்ட தமிழ் நாடு அரசு அனுமதிக்காது. சட்டப் படியும் அது முடியாது. வேண்டு மென்றால் அவர்கள் அணைகட்டி விடுவோம் என்று பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், அவர்களால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது.

கருநாடகம் மற்றும் தமிழ்நாடு இரண்டுமே அண்டை மாநிலங் கள். ஏராளமான தமிழர்கள் கரு நாடகாவில் வசிக்கின்றனர். ஏரா ளமான கருநாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆகவே இவர்களுக்கு எல்லாம் பாதகம் ஏற்படாமல் பார்த்து கொள்வது தான் இரண்டு அரசு களின் பொறுப்பு. தமிழ்நாடு அரசு உணர்கிறது. உள்ளபடியே அவர் களும் உணர்வார்கள் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment