தமிழிசையின் கண்களை மறைப்பது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 6, 2023

தமிழிசையின் கண்களை மறைப்பது ஏன்?

காவல் நிலையத்தில் பறிமுதல் செய்துவைக்கப்பட்ட கஞ்சா என்ற போதை இலையை எலிகள் தின்று விட்டன என்பது செய்தி. தமிழ் நாட்டில் நடந்த இந்த செய்திக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக வலம் வரும் தமிழிசை உடனே கிண்டல் பதிவு செய்துள்ளார்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மதுரா நகரக் காவல்நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவில் 581 கிலோவை எலிகள் தின்று விட்டதாக அம்மாநில காவல் துறை நீதிமன்றத்தில் கூறியது. 

 மகாராட்டிராவில் உள்ள லாத்தூர் காவல் நிலையத்திலும் இதே போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது.  

இந்த செய்தி பெரிய அளவில் வெளியானபோது தமிழிசை அமைதி காத்தார், காரணம் மகாராட்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி உள்ளது. சாமியார் முதலமைச் சருக்கும், தேவேந்திர பட்னாவீசுக்கும் நிர்வாகத்திறமை இல்லை என்று தமிழிசை கேலி செய்யாதது ஏன்?

கண்ணாடியை சரி செய்துகொள் ளட்டும் டாக்டர் தமிழிசை!


No comments:

Post a Comment