சென்னை, ஜூலை 16 - வட சென்னையில் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களிடம் பெரியார் கட்டுமானம் அமைப்பு சரா தொழிற்சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
6.7.2023, மாலை 4 மணிக்கு கன்னிகாபுரம், டிக்காஸ் சாலை, டான்போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்க்கு பொதுக்குழு உறுப் பினர் தி.செ.கணேசன் தலைமை வகித்தார். வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தொழிலாளரணி செயலாளர் க.சுமதி, மகளிர் குழுவினர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்வதின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து சிறப்பான வகையில் மகளிரிடம் எடுத்துக் கூறினார்.
ஸ்கோப் - ஜெயகுமார் நிகழ்ச்சிக்கென சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராம லிங்கம், இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், திருவொற்றியூர் பா.பாலு, க.வெண்ணிலா மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment