சென்னை, ஜூலை 17- பொது வுடைமைக் கட்சித் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப் படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சங்கரய்யாவின் 102ஆவது பிறந்தநாளை முன் னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியிருந் தார்.
அதில், “பொதுவுடைமை இயக் கத்தின் முதுபெரும் தலைவர் 'தகை சால் தமிழர்' சங்கரய்யா அவர் களின் 102-ஆவது பிறந்தநாள்! பொதுவாழ்விலும் பொதுவு டைமை இலட்சியங்களைக் கடைப் பிடிப்பதிலும் நம் எல்லோருக்கும் வழிகாட்டியாக விளங்கும் அவர் நலமுடன் வாழிய பல்லாண்டு!” என பதிவிட்டிருந்தார்.
தகைசால் தமிழர் சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத் தியா கியும் மிகச் சிறந்த பொதுவுடைமைத் தலைவராகவும் திகழும் நம் மரியா தைக்குரிய சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டு களுக்கு முன்பு "தகைசால் தமிழர்" என்ற விருதினை வழங்கி கவுர வித்தது. 102ஆவது பிறந்த நாள் கண்டுள்ள பெரியவர் சங்கரய்யா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் காரணமாக அவர் கல் லூரித் தேர்வினை எழுத முடிய வில்லை. இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.
ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஒரு மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியு மான சங்கரய்யா அவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவ ருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
அதன் அடிப்படையில், மரியா தைக்குரிய சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தின் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment