சென்னை, ஜூலை 30 சென்னை அருகே முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சத்தில் அமைக் கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் நேற்று (29.7.2023) திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாநிலத்தில் 9 இடங்களில் படகு குழாம்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை கிழக்கு கடற் கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து தரும் வகையில் ராயல் என்பீல்டு மோட்டர் சைக்கிள் நிறுவனம் நேட் டிவ் மெடிகேர் அறக்கட்டளையுடன் இணைந்து தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சுகாதார வளாகம், கழிவு நீர்சுத்திகரிப்பு அமைப்பு, நெகிழிபாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், காற்றில் இருந்து குடிதண்ணீர் தயாரிக்கும் இயந்திரம், சிறுவர் பூங்காஆகியவற்றை அமைத்துள்ளன. இதன் மூலம் முட்டுக்காடு படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைத்துள்ளன. இந்நிகழ்ச் சியில் திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, துணை ஆட்சியர் லட்சுமிபதி, தமிழ்நாடு சுற் றுலா வளர்ச்சிக் கழகத்தின் பொது மேலாளர் லி.பாரதிதேவி, பயிற்சி ஆட்சியர்ஆனந்த்குமார், ராயல் என் பீல்டு நிறுவன நிர்வாகிகள் வித்யாத் சிங், சுனில்,அலெக்ஸ் விஜய், நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை நிறுவனத் தின் நிர்வாகிகள் ஏ.எஸ்.சங்கர நாரா யணன் உள்பட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment