பொது சிவில் சட்டத்தை கைவிடக் கோரி சட்ட ஆணையத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

பொது சிவில் சட்டத்தை கைவிடக் கோரி சட்ட ஆணையத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை 14 - பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக் கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத் தின் தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

பன்முக சமூக கட்டமைப்புக்கு பெயர்பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்து வதற்கான முன்னெடுப்பு நடவடிக் கைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறேன். 

சில சீர்திருத்தங்களின் அவசி யத்தை உணர்கிறேன். அதேநேரம், பொது சிவில் சட்டம் கடும் அச் சுறுத்தலை முன்வைக்கிறது. இந் திய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி மதச் சார்பின்மை. அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட் டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன.

மத சமூகங்களின் ஒப்புதல் இன்றி அந்த தனிப்பட்ட சட்டங் களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஒரே மதத்தை பின் பற்றும் மக்களிடம்கூட, இடம், வட்டார அளவில் பழக்க வழக் கங்கள், நம்பிக்கைகள் வேறுபடு கின்றன. அவர்களிடம் ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியம் இல்லை.

கடந்த 2018 ஆக. 31ஆ-ம் தேதி யிட்ட எனது அறிக்கையை விவா திப்பதற்காக சமீபத்தில் கூடிய 21-ஆவது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளது. தவிர, அவசர கதியில் அறிமுகம் செய்வது அரசமைப்பு சட்ட நெறிமுறை களுக்கு முரணாக அமைவதுடன், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மை, குழப்பத்துக்கு வழி வகுக்கும். சிறுபான்மை சமூகங் களுக்கு சில பாதுகாப்பு, உரிமை களை தனிநபர் சட்டங்கள் வழங்கு கின்றன.

பொது சிவில் சட்டம் செயல் படுத்தும் முயற்சியானது, பழங்குடியினர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்த மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, ஒரே மாதிரி பெரும்பான்மை சமூகத்தை உருவாக்கும் முயற்சியாக கருது கிறேன். வேற்றுமையில் ஒற்று மைக்கும், கலாச்சார பன்முகத் தன்மைக்கும் பெயர்பெற்ற இந்தி யாவில், பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிப்பதன் மூலம், இந்த பன்முகத்தன்மை புறக்கணிக் கப்படும்.

பழங்குடியினர் உள்ளிட்ட பல் வேறு சமூகங்களின் தனித்துவ மரபு, சட்டங்களை மதித்து பாது காப்பது முக்கியம்.

இச்சட்டம், பல்வேறு மத சமூ கங்கள் இடையே ஆழமான பிளவு களையும், சமூக அமைதியின்மை யையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டது. மத நல்லிணக்கம் கொண்ட இந்த நாட்டில், முரண் பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கும் ஒரே வகையான சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக் களிடையே பரஸ்பர புரிதலையும், மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம்.

பொது சிவில் சட்டம் இயல்பி லேயே, பழங்குடி சமூகங்களை அதிகமாக பாதிப்பதுடன், அவர் களது பழக்க வழக்கங்கள், நடை முறைகள், உரிமைகளை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரே மாதிரியான சட்டத்தை அமல் படுத்துவது, பாதகமான விளைவு களை ஏற்படுத்தும். அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரி அணுகுமுறை, தற்போது உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக் கூடும்.

பல்வேறு சமூகங்கள் இடையே இணக்கமான வாழ்வை வளர்ப் பதே நமது முதன்மை குறிக் கோளாக இருக்க வேண்டும். ஒரே மாதிரி சட்டத்தை திணிப்பதற்கு பதிலாக, மதங்களுக்கு இடையி லான உரையாடல்களை வலுப் படுத்துவது, சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பது, வேற்றுமையில் ஒற் றுமை உணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம்.

இச்சட்டம் தொடர்பாக மாநில அரசுகள், மதத் தலைவர்கள், சமூக பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்த நடவடிக்கைதான் அனை வராலும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை எட்ட முக்கியமானது. எனவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். 

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment