செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் எட்டு வரை காவல் நீடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் எட்டு வரை காவல் நீடிப்பு

சென்னை, ஜூலை 27   அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். 

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நீதிமன்ற காவல் நேற்றுடன் (26.7.2023) முடிந்த நிலையில் 3-ஆவது முறையாக நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். நேற்றுடன் காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment