பாசிச பி.ஜே.பி.யை வீழ்த்த 26 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் விருந்து இன்று முக்கிய ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

பாசிச பி.ஜே.பி.யை வீழ்த்த 26 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் விருந்து இன்று முக்கிய ஆலோசனை

பெங்களூரு, ஜூலை18- மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று (17.7.2023) மாலையில் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்து அளித்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவெடுத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் 2 ஆவது ஆலோ சனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று (17.7.2023) தொடங்கியது. 

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் பெங்களூரு வந்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும், அமைச்சர்களும் வரவேற்றன‌ர்.

தமிழ்நாட்டில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரை கருநாடக அமைச் சர்கள் வரவேற்றனர்.

இந்தத் தலைவர்கள் தங்குவதற்காக கூட்டம் நடை பெறும் நட்சத்திர விடுதியில் அறைகள் ஒதுக்கப்பட்டன. நிதிஷ் குமார், லாலு பிரசாத், டி.ராஜா உள்ளிட்ட தலை வர்கள் அங்கேயே தங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சதாசிவநகரில் உள்ள தனது சகோதரி செல்வியின் இல்லத்தில் தங்கினார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியா காந்தி, நேற்று நடந்த 2 ஆவது கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு வந்த மு.க.ஸ்டாலின், மம்தா, நிதிஷ்குமார், அர்விந்த் கெஜ்ரிவால், லாலு பிரசாத், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர் களிடம் உற்சாகமாக பேசி வரவேற்றார்.

ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகி யோர் 26 கட்சிகளின் 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து உற்சாகத்துடன் வர வேற்றனர்.

மாலை 7 மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 26 கட்சிகளின் தலைவர்களை வரவேற்று உரையாற்றி னார். பின்னர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா, அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கூட்டணியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். பின்னர் 26 கட்சிகளின் தலைவர்களுக்கும் சோனியா காந்தி 60 வகையான உணவு அடங்கிய இரவு விருந்து வழங்கி உபசரித்தார்.

இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளை களைந்து பொது செயல் திட்டம் உருவாக்குவது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. பொது வேட்பாளர், கூட் டணியின் பெயர் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக் கப்பட்டும் எனத் தெரிகிறது.


No comments:

Post a Comment