மகாராட்டிரா மாநிலத்தில் பெரும் விபத்து: 25 பயணிகள் தீயில் கருகி மரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

மகாராட்டிரா மாநிலத்தில் பெரும் விபத்து: 25 பயணிகள் தீயில் கருகி மரணம்

புல்தானா, ஜூலை 1 மகாராட்டிர மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி இன்று (1.7.2023) காலை  32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலை யில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்தது.

பேருந்து தீப்பிடித்ததால், அதனுள் இருந்த பயணிகளில் 25 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இன்று (1.7.2023) அதிகாலை 2 மணி யளவில் இந்த பயங்கர சம்பவம் நடை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். பேருந்தின் டயர் வெடித்ததில் பேருந்து கவிழ்ந்து தீப் பிடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி யுள்ளது.

No comments:

Post a Comment