மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு பாரபட்சமற்ற விசாரணை தேவை : பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு பாரபட்சமற்ற விசாரணை தேவை : பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தல்

புதுடில்லி,  ஜூன் 2 இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பின ருமான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங் களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன் புறுத்தல் குற்றச் சாட்டு கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இதனிடையே நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி நடத்திய போது, டில்லி காவல்துறையினர் அவர்களை கைது செய்து இழுத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உலக மல்யுத்த சம்மேளனம் கண்டனம் வெளியிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் உள்பட பல்வேறு பன்னாட்டு போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர், வீராங் கனைகள் அறிவித்தனர். பின்னர், விவசாய சங்க தலைவர் திகாயத் தலையிட்டு, 5 நாள் காத்திருக்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், மல்யுத்த வீரர், வீராங் கனைகளின் போராட்டம் குறித்து பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:- "மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்ட விதம் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. உள்நாட்டு சட்டத்துக்கு ஏற்ப இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத் துள்ள குற்றச்சாட்டுகள் மீது பார பட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பான விசாரணை முதல் கட்டத்தில் உள் ளது என்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை எட்ட வேண்டும். இந்த நடைமுறை களின்போது மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக் கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.


No comments:

Post a Comment