திருச்சி வயர்லெஸ் சாலையில் நடைபெற்ற சிறப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

திருச்சி வயர்லெஸ் சாலையில் நடைபெற்ற சிறப்பு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருச்சி, ஜுன் 29 - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, கல்வி வள்ளல் காமராசரின் 121ஆவது பிறந்த நாள் விழா மற்றும் வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பு தெருமுனை கூட்டம் திருச்சி விமான நிலையம் பாரதிநகர் பெரியார் இல் லத்தில் 25.6.2023 அன்று மாலை 6 மணி யளவில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட மகளி ரணி தலைவர் ரெஜினா வரவேற்புரை யாற்றினார்,  மாவட்ட மகளிர்பாசறை தலைவர் அம்பிகா கணேசன் தலைமை வகித்தார், மாநில தொழிலாளரணி அணி செயலாளர் மு.சேகர், மாவட்ட தலைவர் ஞா..ஆரோக்கியராஜ், மாவட் டச் செயலாளர் இரா.மோகன்தாஸ், மேனாள் மாவட்ட தலைவர் ச.கண சேன், மாவட்ட ப.க. செயலாளர் மலர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திராவிடர் கழக மாநில துணை செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி சிறப்புரையாற்றினார். இக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட இளைஞ ரணி செயலாளர் சு.ராஜசேகர், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, மகளிரணி திருவெறும்பூர் ரூபி, மாவட்ட  மாணவர் கழக அமைப்பாளர் யாழினி,மாநகர அமைப்பாளர் கனக ராஜ், திருவரங்கம் நகர செயலாளர் இரா.முருகன், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், பெல். ஆறுமுகம், ஆண்டிராஜ், பீமநகர் பகுதி செயலாளர் முபாரக்அலி, காட்டூர் சங்கிலிமுத்து, இளங்கோவன், காட்டூர் விஜய்யோகா னந்த், ஜெயில்பேட்டை குணசேகரன், பாடகர் பொற்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment