சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக குற்றம் சாட்டி பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தி ருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கோரி கடந்த 2019 நவம்பர் 14ஆம் தேதி மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதி தேதிகளில் முரசொலி அறக்கட்ட ளைக்கு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தாக்கீது அனுப்பியது. இந்த தாக்கீ துகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முர சொலி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, உயர் நீதிமன்றம் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று (14.6.2023) விசாரணைக்கு வந்தது.
அரசியல் உள்நோக்கம்
அப்போது முரசொலி அறக் கட்டளை சார்பில் மூத்த வழக் குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, “இந்த புகார் அரசியல் உள்நோக் கத்துடன் அளிக்கப்பட்டது. புகார் அளித்த சீனிவாசனும், விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பிய அப் போதைய எஸ்.சி., எஸ்.டி., ஆணை யத்தின் துணைத்தலைவரும், தற் போதைய ஒன்றிய அமைச்சருமான எல்.முருகனும் பா.ஜ.க.வைச் சேர்ந் தவர்கள். தமிழ்நாடு பா.ஜ.க. அலு வலகமான கமலாலயம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என யாராவது புகார் அளித்தால் இதுபோல விசா ரணை நடத்துவார்களா? இந்த புகாரை விசாரிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு எந்த அதி காரமும் இல்லை. இந்த வழக்கில் தேசிய எஸ்.சி, எஸ்.டி. ஆணையத் தலைவர் தரப்பில் இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப் படவில்லை என்று வாதிட்டார்.
ஏன் பதில் இல்லை?
அதற்கு பதிலளித்த தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்
ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த விவ காரத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. மனுதாரர்தான் அரசியலாக்கி வருவதாக கூறினார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக் கில் தேசிய எஸ். சி., எஸ். டி. ஆணை யத் தலைவர் ஏன் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இது தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத் தலை வர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரு கிற 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment