ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அரிய கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்கான (முதுமக்கள்) தாழிகள் - வெண்கல வளையல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அரிய கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்கான (முதுமக்கள்) தாழிகள் - வெண்கல வளையல்கள்

தூத்துக்குடி,ஜூன்20 - பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முது மக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், இரும்பாலான ஆயுதங்கள், வெண் கல பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன.

தொடர்ந்து அங்கு ஒன்றிய அரசின் சார்பில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் 'சைட் மியூசியம்' அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட் களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிறிய தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய் தனர். 30 செ.மீ. அகலம், 58 செ.மீ. உயரம் கொண்ட அந்த முதுமக்கள் தாழியில், குழந்தையின் மண்டை ஓடு, கை எலும்புகள் இருந்தன. மேலும் 4 வெண்கல வளையல்களும் இருந்தன. அவற்றில் இரு 4 அடுக்கு வெண்கல வளையல்களும் கிடைத்தன. அவற்றை அணியும் குழந்தை வளர்வதற்கு ஏற்ப வளை யலும் தானாக விரிவடையும் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இவை 3.5 செ.மீ. விட்டமும், 0.2 செ.மீ. கன அளவும், 22 கிராம் எடையும் கொண்டதாக இருந்தன.

குழந்தைக்கான (முதுமக்கள்) தாழியில் சில பொருட்களும் இருந்தன. அதன் வாய்ப் பகுதியில் விரல் தடம் பதிந்து இருந்தது. வெண்கல வளையலா னது உயர் வெள்ளீயம் கலந்து தயாரிக்கப் பட்டு இருந்தது. முதுமக்கள் தாழியில் வைக்கப்பட்டு இருந்த குழந்தைக்கு 5 முதல் 8 வயது வரையிலும் இருக்கலாம் என்றும், முதல் முறையாக குழந் தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கிடைத் துள்ளதாக தொல்லியல் துறை யினர் தெரிவித்தனர்.

இதேபோன்று மற்றொரு முது மக்கள் தாழியை திறந்து ஆய்வு செய்தனர். அதில், வயது முதிர்ந்த வரின் மண்டை ஓடு, கை கால் எலும்புகள் இருந்தன. மேலும் குவளை, கிண்ணம், தட்டு போன்ற மண்பாண்ட பொருட்களும், 2 வெண்கல வளையல்களும் இருந் தன. வெண்கல வளையல் ஒவ் வொன்றும் 5.5 செ.மீ விட்டமும், 0.5 செ.மீ கன அளவும், 24 கிராம் எடையும் கொண்டதாக இருந்தன.

அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் விரைவில் அமைய வுள்ள அருங்காட்சியகத்தில் காட் சிப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment