ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 23, 2023

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்!

தலைவர்கள் ஒன்றுபட்டு கருத்துரை வழங்கினர்

பாட்னா, ஜூன் 23 ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்திட பாட்னாவில் இன்று (23.6.2023) எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர்கள் கருத்துகளை வழங்கினர்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர் தலுக்கான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று (23.6.2023) நடைபெற்று வருகிறது. பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரசை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்குவதில் பீகார் முதலமைச்சரும் அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமார் தீவிரமாக இருந்து வருகிறார். இதற்காக பீகார் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலை வருமான தேஜஸ்வி யாதவுடன் இணைந்து பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று ஆதரவு திரட்டினார். 

இந்த சந்திப்புகளின் அடுத்த கட்டமாக பீகார் தலைநகர் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர் களின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டதற்காக இந்தக் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் தலைவர்கள் தங்களுடைய கருத் துரைகளை வழங்கினர்.

பாட்னாவில் தற்போது நடைபெற்று வரும் எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங் கேற்றுள்ள கட்சித் தலைவர்கள் விவரம் வருமாறு:

பீகார் முதலமைச்சர் அய்க்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார்

பீகார் துணை முதலமைச்சர் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

மேற்கு வங்க முதலமைச்சர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி

டில்லி, பஞ்சாப் முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரி வால், பகவந்த் மான்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

சிவசேனா (யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே

காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் தேசிய மாநாட்டு கட்சி உமர் அப்துல்லா

காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  தலைவர் சீதாராம் யெச்சூர்,

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, தீபங் பட்டாச்சார்யா

ஜார்க்கண்ட் முதல்வர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஹேமந்த் சோரன்

அரியானா மேனாள் முதலமைச்சர் இந்தியதேசிய லோக் தள் ஓம் பிரகாஷ் சவுதாலா

அசாம் ஏயூடிஎப் மவுலானா பக்ருதீன் அஜ்மல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அழைப்பு விடுக்கப்படாத எதிர்க்கட்சிகள் 

பாட்னா எதிர்க்கட்சிகள் சங்கமத்துக்கு சில அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மாநிலங் களில் ஆட்சியில் இருந்த போதும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணக்கமாக போக விரும்பும் கட்சிகள், மாநிலங்களில் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்தாக வேண்டிய கட்சிகள், பா.ஜ.க.வை பகைத்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகளுடன் உறவாடி கெடுக்கும் கட்சிகள் என் பவை அடையாளம் காணப்பட்டு பாட்னா கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

 பாட்னா கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாத அரசியல் கட்சிகள் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ் அல்லது டிஆர்எஸ்), ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், கருநாடகா மேனாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமை யிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், பஞ்சாப் சிரோமணி அகாலி தளம் உ.பி. மேனாள் முதலமைச்சர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை.

அழைத்தும் பங்கேற்காத கட்சிகள் 

ராஷ்டிரிய லோக் தள் (ஆர்.எல்.டி)- இதன் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, உடல் நிலை சரியில்லாதகாரணத்தினால் கூட்டத்துக்கு வர இயலவில்லை என்று கூறி நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள் என கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் முடிவுகளும், செயல்பாடுகளும் பாசிச பி.ஜே.பி.  ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நாடே எதிர்பார்க்கிறது.


No comments:

Post a Comment