நாடு முழுவதும் பொது மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

நாடு முழுவதும் பொது மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர முடிவு

சென்னை, ஜூன் 11- இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வியில் ஆண்டு தோறும் ஒரு லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் மய்யப் படுத்த அதாவது பொது மருத்துவ கலந்தாய்வு நடத்த தேசிய மருத்துவ கழகம் (என்.எம்.சி.) முன் வந்துள் ளது. அதன்படி அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கையை ஒரு கட்ட கலந்தாய்வு மூலம் நடத்த என்.எம்.சி. திட்டமிட்டு உள் ளது. இதன் மூலம் மருத்துவக் கல்வியில் சேர மாணவர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால செயல்முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றும், மாண வர் சேர்க்கையை எளிமைப்படுத்த முடியும் என்றும் என்.எம்.சி. கருது கிறது.

இதுதொடர்பாக கடந்த 2ஆம் தேதியிட்ட தேசிய மருத்துவ கழ கத்தின் அறிவிப்பில், ‘’நீட்-யுஜி தகுதிப்பட்டியல் அடிப்படையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க் கையை பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பொது கலந்தாய்வை நடத்த அதிகாரியை ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும் என்றும் எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களை நிரப்புவதற்கான முறையை அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் தேசிய மருத்துவ கழகம் கூறி யுள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ கழகத்தின் உயர் அதிகாரி யிடம் கேட்டபோது, என்.எம்.சி.யின் இந்த முன்மொழிவு ஒன்றிய அரசுக் கும், மாநில அரசுகளுக்கும் தெரிவிக் கப்படும். பொதுக் கலந்தாய்வை நடத் துவது பற்றிய முறையை அனைத்து அரசும் ஒப்புக்கொண்ட பிறகு இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

மருத்துவ கல்வி சேர்க்கை ஒழுங்குபடுத்துதல்-2023 விதியின் மூலம் இந்தியா முழுவதும் பொது கலந்தாய்வை கொண்டு வரும் தேசிய மருத்துவ கழகத்தின் முயற் சியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தேசிய மருத்துவ கழகம் என்ற ஒரு ஒன்றிய அமைப்பு, மாநில அரசு கல்லூரிகள், ஒன்றிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களுக்கான 15 சதவீத அகில இந்திய கல்வி இடங்களை மட்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பு வதற்கு ஒழுங்குமுறை விதிகள் அனு மதிக்கின்றன. ஆனால் தற்போது முன் மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்கு முறை, தேசிய மருத்துவக்கழக 2019ஆம் ஆண்டு சட்டத்திற்கு இணக்கமாக இல்லை. இந்த சட்டத்தின்படி, மாநில அரசுக்கான கல்வி இடங்களை அந்தந்த மாநிலங்களே கலந்தாய்வு மூலம் நிரப்ப முடியும். எனவே இது போன்ற ஒழுங்குமுறைகள் எதுவும் மாநில அரசின் உரிமைகளை பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து சட்ட வழிமுறைகளை யும் நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2ஆம் தேதியன்று தேசிய மருத்துவ கழகம் அறிவித்தபடி, புதிய பொது கலந்தாய்வு நடை முறைக்கு வருவதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கும் தேசிய மருத்துவக் கழக 2019ஆம் ஆண்டு சட்டத்திற்கும் இடையே முரண் பாடுகள் உள்ளதாகவும் கூறப் படுகிறது. இந்த சட்டத்தின் 14 (3)ஆம் பிரிவில், அகில இந்திய கல்வி இடங்களுக்கான மருத்துவ பொது கலந்தாய்வை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் அதிகாரி நடத் தலாம். மாநில அளவிலான கல்வி இடங்களுக்கான பொது கலந் தாய்வை மாநில அரசு நியமிக்கும் அதிகாரி நடத்தலாம் என்று கூறப் பட்டுள்ளது. இந்த புதிய நடை முறை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுக்கு சுகா தார சேவை பொது இயக்குனர் அதுல் கோயல் கடிதம் எழுதி யிருந்தார். அதில், மருத்துவ கல்வி இடங்கள் முடங்குவதை தவிர்க் கவும், மாணவர் சேர்க்கையை எளி மைப்படுத்தவும் மருத்துவ கவுன்சிலிங் குழு மூலம் அனைத்து அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி கல்வி நிறுவனங்களின் கல்வி இடங் களுக்கு மய்யப்படுத்தப்பட்ட பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அதில், பொது கலந்தாய்வை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவிக் கப்பட்டு இருந்தது. இது சம்பந்த மாக டில்லிக்கு சென்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள், ஒன்றிய அரசு அதி காரிகளை சந்தித்து பேசியுள்ளனர். இதுபற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது, ‘பொது கலந்தாய்வு முறை இருக்காது’ என்று ஒன்றிய அரசு கூறியதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாட்டின் மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் பேசியபோது, ‘அனைத்து மருத்துவக் கல்வி இடங்களையும் மய்யப்படுத்தப் பட்ட பொது கலந்தாய்வு முறை மூலம் நிரப்பும் முறையை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்த கடிதமும் வரவில்லை என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment