காங். தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கபில் சிபல் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

காங். தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கபில் சிபல் கருத்து

புதுடில்லி,ஜூன்20 - அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என மேனாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜகவை தோற் கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பீகார் தலை நகர் பாட்னாவில் வரும் 23ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பீகார் முதலமைச்சரும் அய்க்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் இதற்கான ஏற்பாடு களை செய்து வருகிறார்.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேனாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட் டோர் பங்கேற்க உள்ளனர்.

இதில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது தொடர் பாக ஆலோசனை நடத்த உள் ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவரும் மாநிலங் களவை உறுப்பினருமான கபில் சிபல் பிடிஅய் செய்தி நிறுவனத் துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஒன்றியத்தில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக கருநாடக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு அமைந் துள்ளது. அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள மக்களவைத் தேர்த லானது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. மாறாக அவர் நிலை நாட்ட விரும்பும் சித்தாந்தத்துக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளுக்கு பொது வான நோக்கம், அதைப் பிரதிப லிக்கும் வகையிலான செயல் பாடுகள், தொகுதிப் பங்கீடு விவகா ரத்தில் விட்டுக்கொடுக்கும் மனப் பான்மை ஆகிய 3 பண்புகள் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று 3ஆவது முறையாக ஆட்சி அமைப்பதற் கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment