விவசாயிகளுக்கும் - பொதுமக்களுக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியினால் ஏற்படும் பயன்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

விவசாயிகளுக்கும் - பொதுமக்களுக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியினால் ஏற்படும் பயன்கள்!

 தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை, ஜூன் 25- காவிரி ஆறு காடு, மலை, பள்ளதாக்கு பகுதி களில் நீண்டதூரம் கடந்து வருவ தால், பாறை மற்றும் மண் திட்டுக் களில் ஏற்ப டும் அரிமானத்தின் கார ணமாக காவிரி ஆற்று நீரில் மணல் மற்றும் சிறு துகள் கள் அதிகமாக அடித்து வரப்படு கின்றது.

காவிரி ஆற்று நீரில் அதிகமான மணல் மற்றும் சேற்று படிவங்கள் கலந்து வரும்பொழுது வாய்க்கால் களின் தரைமட்ட சரிவு மிகவும் குறைவாக உள்ளதால் நீரின் வேகம் குறைந்து மண் திட்டுக்கள் ஏற்படுகிறது. நீர் வழித்தடங்களில் அதிகமான நீர்த்தாவரங்களும், செடி கொடிகளும் வளர்வதால் நீரில் கலந்து வரும் சேற்று படிவங் கள் தடைபட்டு மண்மேடுகள் உருவாகின்றன.

மண்மேடுகளை தூர்வாரும் பட்சத்தில் ஒவ்வொரு வாய்கால் களின் கடை மடை பகுதி வரை நீர் தங்குதடையின்றி சென்றடையும். மழை காலங்களில் விவசாயப் பயிர் கள் நீரில் மூழ்காமல் விரைவில் வடி கால்களில் வடிவதினால் பயிர் சேதங்களை குறைக்க முடியும், இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி வடிநிலப் பகுதி யில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்களில் கடை மடைவரை தண்ணீர் கொண்டு செல்ல அவற்றின் அவசியம் கருதி தூர்வாரப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

நீர்வளத்துறையின் செயல்பாடுகள்!

மூன்றாண்டுகளுக்கு மேல் தூர் வாரப்படாத கால்வாய்கள், வாய்க் கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றை நீர்வளத் துறையின் அலுவலர்கள் மூலமாக கண்டறிந்தும், தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் தனிப் பிரிவி லிருந்தும், அமைச்சர்களிடமிருந் தும், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலி ருந்தும், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் பெறப் படுகின்ற மனுக்கள் அனைத்தையும் நீர்வளத் துறை அலுவலர்கள் நேரடி யாக தளஆய்வு செய்து பரிசீலனை செய்யப்படுவதன் அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யப்படுகிறது.

2023-2024-ஆம் ஆண்டு காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை தூர்வார 17.04.2023 அன்று 691 பணிகள் 4773.13 கி.மீ நீளத்திற்கு ரூ.90.00 கோடி மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி திருச்சி மண்டலத் திற்குட்பட்ட ஆறுகள், கால்வாய் கள், வாய்க்கால்கள், வழங்கு வாய்க் கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வார சேலம் மாவட்டத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகளும், நாமக்கல் மாவட்டத் தில் 50 இலட்சம் ரூபாய் மதிப் பீட்டில் 5 பணிகளும், திருச்சி மாவட்டத்தில் 15.88கோடி ரூபாய் மதிப்பீட் டில் 100 பணிகளும், கரூர் மாவட்டத்தில் 6.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 பணிகளும், அரியலூர் மாவட்டத்தில் 3.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 பணிகளும், பெரம்பலூர் மாவட் டத்தில் 4 கோடி ரூபாய் மதிப் பீட்டில் 39 பணிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 189 பணிகளும், திரு வாரூர் மாவட்டத்தில் 12.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 111 பணிகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 பணிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 51 பணிகளும், புதுக் கோட்டை மாவட்டத்தில் 2.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகளும் மற்றும் சென்னை மண்டலத்திற் குட்பட்ட கடலூர் மாவட்டத்தில் 55 பணிகள் 768.30 கி.மீ நீளத்திற்கு ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் எடுத்து கொள்ளப்பட்டன. இத னால் காவிரிக் கடைமடைப் பகுதிகள் அனைத்து இடங்க ளுக்கும் தண்ணீர் தடை இல்லாமல் சென் றுக்கொண்டுள்ளது.

தூர்வாரும் இடங்களில் விளம்பரப் பலகை!

நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அவர்கள் 27.04.2023 அன்று தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். 

தூர்வாரும் பணிகள் நடை பெறும் இடங்களில் பணியின் பெயர், பணியின் மதிப்பு, ஒப்பந்தக் காரர் பெயர், உதவிப் பொறியாளர் / உதவி செயற்பொறியாளர் / ஒருங்கிணைப்பு அலுவலர் பெயர். பணி துவங்கிய நாள் மற்றும் பணி முடிக்க உத்தேசிக் கப்பட்ட நாள் ஆகிய விவரங்கள் அடங்கிய விளம் பரப் பலகைகள் வைக்கப்பட் டுள்ளன.

தூர்வாரும் பணிகளை கண் காணிக்க மாவட்டத்திற்கு ஒரு இந்திய குடிமையியல் பணியை சார்ந்த அதிகாரிகள் நியமிக்கப் பட்டு, அவர்களது மேற்பார் வையில் பணிகள் நடைபெற்றன. ஆறுகள்/ கால்வாய்கள்/ வாய்க் கால்கள்/ வடிகால்கள்/ ஏரிகள் பாசன பரப்பிலுள்ள விவசாயிகள், பஞ்சாயத்து அலுவலர், நீர்வளத் துறை பிரிவு அலுவலர் உள்ளடக் கிய உழவர்குழு, உதவி வேளாண் அலுவலர்கள் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டு தூர்வாரும் பணி கள் கண்காணிக்கப்பட்டன.

தூர்வாரும் பணிகளில் ஒரு நாளில் அதிக பட்சமாக 836 இயந் திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு பணி கள் நடைபெற்றன. தூர்வாரும் பணிகளின் தினசரி முன்னேற்றத் தைப் பதிவேற்ற களப்பொறியாளர் களுக்கான மொபைல் செயலி உரு வாக்கப்பட்டு பணிகள் கண்காணிக் கப்பட்டன.

பணிகளை முதலமைச்சர் ஆய்வு!

மேலும், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை 9.6.2023 அன்று பார்வையிட்டார். 

தூர்வாரும் பணிகளை தினந் தோறும் ஆய்வு மேற்கொண்டு தினசரி முன்னேற்ற அறிக்கை களை அன்றைய தினமே கூடுதல் தலைமை செயலா ளர் நீர்வளத் துறை அவர்க ளுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைக்கப்பட்டது.

உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும் தூர் வாரும் பணி கள் குறித்த காலத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட தாலும் தண்ணீர் கடைமடைவரை விரைந்து சென்றடைவதா லும் விவசாயிகள் விவசாயப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள இயலும். பருவமழை காலத்தில் வடிகால் களில் தூர்வாரும் பணி மேற் கொள்ளப்பட்டதால் வெள்ள நீர்  விரைவாக வடிந்து பயிர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படா மல் பாதுகாக்கப்படும். 

சம்பா பயிர்கள் நீரில் மூழ்காமல் காப்பாற்றப்படும்!

இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக் கான முன்னேற்பாடுகளும் முன் கூட்டியே துவக்கப்படுவ தால் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் பாதுகாக்கப்ப டும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால், கோடை பயிர் வகை களையும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற் படும். 

இன்றைய தேதியில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 352 ஏக்கர் அளவில் குறுவை சாகுபடி யில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment