கரோனா இல்லாத தமிழ்நாடு கரோனா முற்றிலும் விடுபட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 27, 2023

கரோனா இல்லாத தமிழ்நாடு கரோனா முற்றிலும் விடுபட்டது

சென்னை. ஜூன் 27-  தமிழ்நாட்டில் நேற்று ஒருவர்கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.கடந்த 2019ஆ-ம் ஆண்டு கொடிய கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை பீதியில் உறைய வைத்தது. கொத்துக் கொத் தாக மனித உயிர்கள் பறிபோயின. இந்தத் தொற்று தமிழ்நாட்டில் 2020ஆ-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. கரோனாவின் கோரப் பிடியில் பலர் சிக்கி னார்கள்.

உயிர்ப் பலி எண்ணிக்கையும் உயர்ந்தது.முகக் கவசம் அணிதல், அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல், தனி மனித இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. மேலும் ஊரடங்கு உத்தரவும் சில மாதங்கள் அமல்படுத்தப்பட்டது.

இதனால் வேலையிழப்பு, வாழ் வாதார இழப்பு போன்ற சங்கட மான சூழ்நிலையை மக்கள் எதிர் கொண்டனர். நாட்டின் பொருளா தாரமும் ஆட்டம் கண்டது. இந்த நிலையில் கரோனாவின் கொட் டத்தை அடக்குவதற்காக தடுப்பூசி களை மருத்துவ வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதனால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. கரோனா தொற்றின் விரீயமும் குறைந்தது. அதே நேரத் தில் கரோனா தொற்று அவ்வப் போது உருமாறி மிரட்டவும் செய்தது.

கரோனா பாதிப்பு இல்லை

ஆரம்பத்தில் உயிர்க்கொல்லி நோய் போன்று மக்களை மிரட்டிய கரோனாவுக்கு தடுப்பூசிகள் பாது காப்பு அரணாக வந்த பின்னர் சாதாரண காய்ச்சல் நோய் போன்று ஆனது. கரோனா பீதி மக்கள் மனதில் இருந்து மறைய தொடங்கியது. தொற்று பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. தமிழ்நாட் டில் கடந்த சில மாதங்களாகவே தொற்றுப் பாதிப்பு இரட்டை மற் றும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலே இருந்து வந்தது.

25.6.2023 அன்று தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் ஒருவர் தொற்றுப் பாதிப்புக்கு உள்ளா னார். கரோனாவுக்கு 21 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்றைய தினம் 5 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

17 பேர் மட்டும் சிகிச்சையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 26.6.2023 அன்றைய கரோனா பரிசோதனை முடிவில் ஒருவர் கூட தொற்றால் பாதிக்கப் படவில்லை என்ற மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு மேலாக அலற வைத்து வந்த கரோனா தொற்று தமிழ்நாட்டில் இருந்து விடைபெறுகிறதா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒருவர் குணம் அடைந்தார். இதையடுத்து இந்த நோய்க்கு சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 16 ஆக குறைந் தது. 

இதே போன்று வரும் நாட்க ளிலும் யாருக்கும் தொற்று ஏற்பட வில்லை என்றால், கரோனா நோயாளிகளும், தொற்று பாதிப் பும் இல்லாத மாநிலமாக தமிழ் நாடு வெகு விரைவில் உருவெ டுக்கும்.

தமிழ்நாட்டில் 25.6.2023 அன் றைய நிலவரப்படி 6 கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 342 பேர் கரோனா பரிசோதனையை மேற் கொண்டுள்ளனர்.

இதில் 21 லட் சத்து 4 ஆயிரத்து 71 ஆண்கள், 15 லட்சத்து 6 ஆயிரத்து 483 பெண்கள், 39 திருநங்கைகள் என 36 லட்சத்து 10 ஆயிரத்து 593 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டனர். சிகிச்சை பலனின்றி 38 ஆயிரத்து 80 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், கள்ளக் குறிச்சி, கரூர், மதுரை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் கரோனா நோயாளிகள் சிகிச் சையில் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment