இன்றைய ‘தினமலரில்' ‘‘இது உங்கள் இடம்'' பகுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முதல் 50 இடங்களில் நான்கு பேர் வந் திருக்கிறார்கள். இதைப்பற்றி எல்லாம் ‘நீட்' எதிர்ப்பாளர்கள் பேசமாட்டார்கள். முதலமைச்சர் பாராட்டமாட்டார் என்று தனக்கு ‘வசதியாக' எழுதியிருக்கிறது. விதிவிலக்குகள் விதியாக முடியாது.
முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில்
37 பேர் இலட்சக்கணக்கில் செலவு செய்து ‘நீட்' பயிற்சி மய்யங்களில் (கோச்சிங் சென்டரில்) படித்தவர்கள், மற்றும் 29 பேர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மைத் தகவல்களை மறைத்து, தமிழ்நாட்டில் 4 பேர் முதல் 50 பேரில் இடம்பிடித்துள்ளனர் என்று எழுதுவதன் நோக்கமென்ன? விதிவிலக்குகள் விதியாகாது என்பதை ‘‘விதி''யை நம்பும் கூட்டம் விளம்பரப்படுத்துவதைப் புரிந்துகொள்ளவேண்டும்!
No comments:
Post a Comment