அரசு மாதிரிப்பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களை சேர்க்க நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

அரசு மாதிரிப்பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களை சேர்க்க நடவடிக்கை

சென்னை, ஜூன் 14 -  அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர்-செயலர் இரா.சுதன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி, நுண் கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப் பட்டது.

அதை செயல்படுத்தும் விதமாக சென்னை, அரியலூர், மதுரை, தருமபுரி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகை யில் உண்டு, உறைவிட வசதிகளு டன் கூடிய 40 மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மாதிரிப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர தகுதிபெற்ற மாணவர்களின் விவரம் தற்போது அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மாதிரிப் பள்ளிகளில் ஜூன் 21-ஆம் தேதிக் குள் சேருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள அதன் தலைமை ஆசிரியர்களுக்கு அந் தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் களை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment