பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷண் பிரதமரை புகழ்ந்து கவிதை வாசித்தாராம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷண் பிரதமரை புகழ்ந்து கவிதை வாசித்தாராம்

புதுடில்லி ஜூன் 12 வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ‘மகாசம்பர்க் அபியான்’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று (11.6.2023) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பேசினார். அப்போது பாதிப்பு, துரோகம் மற்றும் அன்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டும் உணர்ச்சிப்பூர்வமான ‘கபி அஷ்க், கபிகாம்’ என்று தொடங்கும் கவிதையுடன் தனது பேச்சை தொடங்கினார். “சில நேரங்களில் கண்ணீரையும், சில நேரங்களில் சோகத்தையும் சில நேரங்களில் விஷத்தையும் குடிக்கிறீர்கள். அப்போதுதான் சமுதாயத்தில் வாழ முடியும். இதுதான் என் அன்புக்கு கிடைத்த வெகுமதி. என்னை துரோகி என்கிறார்கள். அதை அவப்பெயர் அல்லது புகழ் என்று அழைக்க அவர்கள் என் பெயரை எடுத்துக் கொள்கிறார்கள்” என்பது அந்த கவிதை வரிகளின் அர்த்தம்.

பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றம் சாட்டி உள்ளனர். இதையடுத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புகார் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை பிரிஜ்பூஷண் மறுத்து வருகிறார். இந்நிலையில்தான் இந்தப் போராட்டத்தை நினைவு படுத்தும் வகையில் பூஷண் இந்தக் கவிதையை வாசித்துள்ளார்.

No comments:

Post a Comment