உங்களுக்குத் தெரியாது - என்னைப் போன்றவர்கள் வயதானவர்கள் உங்களுக்குத் தெரியாது இருந்தால் தாசித் தெருவில் நான் அமல் செய்தது தெரியும். பிறகு நான் தானே தாசி முறையையே அழித்தவன். ‘குடிஅரசு’ நிலையத்தில் 10 மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். அவினாசி போன்ற இடங்களில் மாநாடு நடக்கும். நான் சென்றால் தனியாக எனக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுப்பார்கள். பிறகு நாங்கள் தாசித் தொழில் கூடாதென்று சட்டமே செய்தோம். அப்பொழுது சர்க்காரும் (அரசும்) பொட்டுக் கட்டக் கூடாதென உத்தரவும் போட்டுவிட்டார்கள்.
சட்டசபையில் ஒரு தடவை தாசி முறை கூடாது என்று தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். திரு சி.எஸ். ரத்தின சபாபதி முதலியார் முயற்சியால் திருமதி முத்து லட்சுமி ரெட்டிக்குச் சட்டசபையில் ஒரு உறுப்பினர் பதவி கிடைத்தது. அப்பொழுது அந்த அம்மையார் மேற்படி தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். இதைக் கண்டு சத்தியமூர்த்தி அய்யர் துள்ளிக் குதித்தார். அப்பொழுது அந்த அம்மையார் “இத்தனை நாள் நாங்கள் செய்து வந்த தொண்டு போதும். எங்களுக்கு வந்த புண்ணியமும் போதும். இனிமேல் உங்கள் இனப் பெண்கள் செய்து அந்தத் தொண்டின் பலனையும், புண்ணியத்தையும் பெற்று, இப்பொழுது இருப்பதைவிட, இன்னும் கெட்டிக்காரராக ஆகட்டும்“ என்று சொல்லிய பிறகுதான் சத்தியமூர்த்தி அடங்கினார்.
8-7-1956 இல் ஈரோட்டில் தந்தை பெரியார்சொற்பொழிவு:
(விடுதலை’ 22-7-1956)
No comments:
Post a Comment