சிவகங்கையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

சிவகங்கையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

சிவகங்கை, ஜூன் 29 -  சிவ கங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சாலை கிராமத்தில் 24.6.2023 சனிக்கிழமை  மாலை 5 மணிக்கு அண்ணா கலையரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலை ஞர் அவர்களின் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை  கூட்டம் நடைபெற்றது.  

இக்கூட்டத்திற்கு இளையான்குடி ஒன்றிய கழக தலைவர் மா. சுந்தரா சன் தலைமை தாங்கினார். 

இளையான்குடி ஒன்றிய செயலாளர் வ.பழனிவட்டன் வரவேற்புரை ஆற்றினார். கழக பேச் சாளர் இரா பெரியார் செல்வன் சிறப்புரையாற் றினார். கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் இரா. புகழேந்தி,  மாவட்ட செயலாளர் பெரு. இராசாராம்,  மாவட்ட காப்பாளர் வழக்கறிஞர் ச. இன்ப லாதன், சாலை கிராமம் திராவிடர் கழக பொறுப் பாளர் சேது. ஜெகதீசன்,  அ.சோனை,  தி. கா பாலு முன்னிலை வகித்து உரை யாற்றினார்கள். 

சிறப்பு அழைப்பாளர்களாக திமுக இளையான் குடி தெற்கு ஒன்றிய செய லாளர் ஆறு. செல்வரா சன்,  இளையான்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளையான்குடி ஒன்றிய செயலாளர் ஜேம்ஸ் வளவன்,  தமிழ் புலிகள் கட்சி மாநில பொறுப்பாளர் தமிழ் முருகன் ஆகியோர் உரை யாற்றினர்.  இறுதியில் வல்லக்குளம் சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment