திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

 மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள், திருத்துறைப்பூண்டியில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மாணவர்களை பங்கேற்கச் செய்வதென முடிவு

திருத்துறைப்பூண்டி,ஜூன்15 - திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந் துரையாடல் கூட்டம் 11.06.2023 காலை 10 மணி அளவில் மேட்டுப் பாளையம் பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.      

இக்கூட்டம், ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராஜ், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் க.வீரையன்,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் இர.புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வீ.மோகன், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து ரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்து வருங்காலங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஒன்றிய நகரத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்த வேண் டும் என்று விளக்கி பேசினார்கள்.

தந்தை பெரியார் மனித உரி மைப் போரான வைக்கம் நூற் றாண்டு விழா. நீதி கட்சி நூற் றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி நகர, ஒன்றியத்தில் கிராமம் கிராமமாக வெகு விமரி சையாகவும் தெருமுனை பிரச் சாரம் நடத்துவது எனவும், அனைத்து பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிப்பது எனவும், விடுதலை சந்தாக்களை புதுப்பித்து சந்தாக்களை வழங்குவது எனவும், தலைமைப் பொதுக்குழு தீர்மானங் களை நிறைவேற்றுதல் எனவும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு நாள் முழுவதும் பெரியார் பயிற்சி பட்டறைக்கு திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகரத்திலிருந்து 15 மாண வர்கள் - மாணவிகளை பங்கேற்க செய்வது எனவும், செப்டம்பர் 17 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பட ஊர்வலம் மற்றும் கிராமங்களில் கொடியேற்றி சிறப்பாக நடத்து வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஒன்றிய நகர புதிய பொறுப்பாளர்கள்

நகரத் தலைவர் சு.சித்தாரத்தன், நகரச் செயலாளர் ப.நாகராஜ், ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய செயலாளர் இரா.அறிவ ழகன், ஒன்றிய அமைப்பாளர் ந.செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

நடத்துநர் அ.கோபி புதிய உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். தி.குணசேகரன் உடல் நலக் குறைவு காரணமாக வர இயலாத காரணத்தால் அவர் அனுப்பிய செய் தியை மாவட்ட ப.க துணைத் தலைவர் இர.புகழேந்தி வாசித்தார்.  நிகழ்வில்... ஆர்.அறிவொளி, அஜெ.உமாநாத், ப.நாகராஜன், ந.செல்வம், ச.பொன் முடி, இரா.அறிவழகன், தி.பு.அறிவு முதல்வன், கே.அழகேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment