பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் புதிய மொழியைக் கற்றுக்கொள்வது வழக்கம்தான். ஆஸ்திரேலியாவில் ஒரு தொடக்கநிலைப் பள்ளி சைகை மொழியைத் தனது பாடத்திட்டத்தில் இணைத்துள்ளது.
அவ்வாறு செய்யத் தூண்டினார் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர். ஆஸ்திரேலிய சைகை மொழி வகுப்புகள் வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள Leanyer தொடக்கப்பள்ளியில் அன்றாடக் காட்சியாகிவிட்டன. மற்ற பள்ளிகளும் இதே போன்ற வகுப்புகளை நடத்த இது ஊக்குவிப்பாக அமை யும் என்று நம்புகிறார் பள்ளி முதல்வர்.
பள்ளியில் பயிலும் செவிப்புலன் குன்றிய மாணவர் சோஃபி வால்ட் ரோனின் Sophie Waldron) யோசனையில் பிறந்தது இந்தத் திட்டம். அவரைப் போன்ற மற்ற மாணவர் களுக்கும் இந்த வகுப்புகள் நல்ல பலன் தந்துள்ளன. அவர்களின் தன்னம் பிக்கை பெருகியதாகக் கூறுகின்றனர் ஆசிரியர்கள்.
No comments:
Post a Comment